பின் செல்ல
வாழ்க்கைத் தரத்தை பாதுகாத்தல்

வீட்டமைப்பு மற்றும் பொது வசதிகள்

  • குறைந்த வருமானம் மற்றும் நடுத்தரவர்க்க வீட்டுத் திட்டங்களை நிர்மாணிப்பதற்கு அரசுக்குச் சொந்தமான காணிகள் வழங்கப்படும்.
  • அரசாங்கத்தால் நெறிப்படுத்தப்பட்டு பூர்த்தியடையாத வீட்டுத்திட்ட நடவடிக்கைகளை துரிதமாகப் பூர்த்தி செய்து அனைவருக்கும் நியாயமான வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதற்காக புதிதாக உருவாக்கப்படும் பன்முகப்படுத்தப்பட்ட வீட்டுவசதித் திட்டத்தில் கிராமப்புற, நகர்ப்புற, மலைநாட்டு, பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மீனவ சமூகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்கள் நிர்மாணிப்பதற்குத் தேவையான மூலப்பொருட்கள் இறக்குமதிக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள அதிக வரியை நீக்கி கட்டுமான செலவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தங்களது முதல் வீட்டு அலகை வாங்கும் அல்லது வீடு கட்டுவதற்கான முதல் காணியை வாங்கும் குடும்பங்களுக்கு குறைந்தபட்ச வட்டி விகிதத்தில் நீண்ட கால கட்டண விருப்பங்களுடன் விசேட வீட்டுக் கடன் திட்டம் (இரண்டு தலைமுறை கடன்) அறிமுகப்படுத்தப்படும்.
  • மின்சாரம், பெற்றோலியம், எரிவாயு மற்றும் நீர் உள்ளிட்ட அனைத்து பயன்பாடுகளின் ஒழுங்குமுறைகளை உறுதி செய்ய இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) வலுப்படுத்தப்படும்.

அனைவருக்குமான இலங்கையை கட்டியெழுப்புவோம்

எம்முடன்இணைந்து மாற்றத்தை ஏற்படுத்துங்கள்