பின் செல்ல
வாழ்க்கைத் தரத்தை பாதுகாத்தல்

மத மற்றும் கலாச்சார விவகாரங்கள்

  • கருணை, அன்பு, சமநிலை மற்றும் பரிவு ஆகியவற்றைப் பரப்பும் நேர்மையான சமூகத்தை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். பௌத்த மதத்திற்கு முதன்மை இடம் அளித்து, புத்த சாசனத்தை வளர்த்து பாதுகாக்கும் அதே வேளையில், பிற மதங்களைப் பின்பற்றுபவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்கள் விரும்பும் மதத்தை கடைபிடிக்கவும் வழிபடவும் உள்ள அடிப்படை உரிமையை உறுதி செய்யவும் நாங்கள் செயல்படுவோம்.
  • அறநெறிப் பாடசாலைகள், பிரிவெனாக்கள் மற்றும் மத கல்வியை வலுப்படுத்த முழு அரச ஆதரவு வழங்கப்படும்.
  • தங்கள் சொந்த மதத்தைத் தவிர பிற மதங்கள் பற்றிய போதுமான புரிதலை சிறுவர்களுக்கு வழங்க, பாடசாலை பாடத்திட்டத்தில் மதங்களுக்கிடையேயான கல்வியை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • செயற்கை நுண்ணறிவின் (AI) மனிதாபிமான மற்றும் நெறிமுறை மேம்பாட்டிற்காக பௌத்த தத்துவம் மற்றும் பிற மத தத்துவங்களிலிருந்து பெறக்கூடிய எடுத்துக்காட்டுகள் பற்றிய ஆராய்ச்சிக்கு அரசு ஆதரவு வழங்கப்படும்.
  • கலைப் படைப்புகளுக்கான அனைத்து தணிக்கைகளையும் நாம் நீக்குவோம். அதற்கு பதிலாக, படைப்புகளை வகைப்படுத்தி மதிப்பிடுவதற்கான குறிப்பிட்ட முறையை நிறுவுவோம்.
  • பாரம்பரிய கலைஞர்களின் தொழில் வாழ்க்கையை உயர்ந்த தரத்திற்கு உயர்த்த தேவையான அரச ஆதரவை வழங்குவோம்.
  • கலைப் படைப்புகள் தொடர்பான அறிவுசார் சொத்து பிரச்சினைகளைத் தீர்க்க அறிவுசார் சொத்துப் பணியகத்துக்குள் ஒரு விசேட பிரிவை நிறுவுவோம்.
  • டிஜிட்டல் குழும திரையரங்குகளை ஊக்குவிப்பதன் மூலம் இலங்கை பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்க முயற்சிப்போம்.
  • ஓவியங்கள், சிற்பங்கள், புகைப்படங்கள் மற்றும் இசை நாடகங்கள் உள்ளிட்ட கலாச்சார மற்றும் கலை நடவடிக்கைகளுக்கான பயிற்சி மற்றும் கண்காட்சிகளை ஏற்பாடு செய்ய ஒவ்வொரு மாவட்டத்திலும் இலவச கலை இடங்களை நிறுவுவோம்.

அனைவருக்குமான இலங்கையை கட்டியெழுப்புவோம்

எம்முடன்இணைந்து மாற்றத்தை ஏற்படுத்துங்கள்