பின் செல்ல
அனைத்து பிரஜைகளையும் வலுப்படுத்தல்

மாற்றுத்திறனாளிகள்

மனித இனத்தின் வளமான பன்முகத்தன்மையின் ஒரு பகுதியாக இயலாமையை அங்கீகரிக்கும் திட்டத்தை நாங்கள் செயல்படுத்துவோம். இந்த கருத்தியல் கட்டமைப்பிற்குள், இலங்கையின் வளர்ச்சி மற்றும் சமூக கட்டமைப்பிற்குள் மாற்றுத்திறனாளி குடிமக்களின் தன்னாட்சி, உள்ளடக்கம் மற்றும் பங்களிப்பை நாங்கள் உறுதி செய்வோம்.

  • மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நன்மைகள் தொடர்ந்து வழங்கப்படும். மேலும்இ 410,000 பயனாளிகளுக்கு நலன்புரி உதவித்தொகை மாதத்துக்கு 10,000 வரை (ரூ. 7,500 இலிருந்து) அதிகரிக்கப்படும்.
  • மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் சாசனத்தின் கோட்பாடுகளுக்கு ஏற்ப உள்நாட்டு சட்டக் கட்டமைப்பை உருவாக்குதல்.
  • கல்வி, வேலைவாய்ப்புகள், சுகாதாரம், வறுமை ஒழிப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு, வீட்டுவசதி, போக்குவரத்து, விளையாட்டுதுறை, நீதித்துறை, பொதுமக்கள் பங்கேற்பு மற்றும் சமூக, மத, கலாச்சார மற்றும் பிற உரிமைகள் தொடர்பான அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் அணுகலை உறுதி செய்வோம்.
  • மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை மேம்படுத்துவதற்கான தேசிய திட்டத்தை திறமையாகவும் பயனுள்ள வகையிலும் நிர்வகிப்பதற்காக தேசிய தரவுத்தளம் அமைக்கப்படும்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கு அரச சேவையில் 3% வேலைவாய்ப்புகளை வழங்கும் கொள்கை அமுல்படுத்தப்படும்.
  • மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் அனைத்து குடிமக்களின் உரிமைகளுக்கு இணையாக இருப்பதை உறுதி செய்ய கொள்கைகளின் செயலாக்கத்தை கண்காணிக்க மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் ஆணைக்குழுவை அமைப்போம்.
Download Disability and People with Disabilities Charter

அனைவருக்குமான இலங்கையை கட்டியெழுப்புவோம்

எம்முடன்இணைந்து மாற்றத்தை ஏற்படுத்துங்கள்