பின் செல்ல
தேசியப் பாதுகாப்பு

ஊழல் எதிர்ப்புச் சட்டம்

  • சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை விரைவாக செயல்படுத்த தேவையான வசதிகளும் பயிற்சியும் வழங்கப்படும்.
  • வழக்குத் தொடுப்பதன் சுதந்திரம் மற்றும் திறனை உறுதி செய்ய சுயாதீன பொது வழக்குத் தொடுநர் அலுவலகம் நிறுவப்படும்.
  • ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருடப்பட்ட சொத்துக்களை மீட்டெடுக்கும் சட்டமூலம் புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் நிறைவேற்றப்படும். ஊழல் செயல்களால் பெறப்பட்ட சொத்துக்களை மீட்டெடுப்பது விரைவாக மேற்கொள்ளப்படும்.
  • தற்போது நிறுவப்பட்டுள்ள நிரந்தர மூவரடங்கிய ஊழல் எதிர்ப்பு மேல் நீதிமன்றங்களை மீண்டும் பலப்படுத்தி இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான வழக்குகளை நாள்தோறும் (Day-to-day trials) தாமதமின்றி நடத்த தேவையான சூழ்நிலை உருவாக்கப்படும்.

அனைவருக்குமான இலங்கையை கட்டியெழுப்புவோம்

எம்முடன்இணைந்து மாற்றத்தை ஏற்படுத்துங்கள்