பின் செல்ல
தேசியப் பாதுகாப்பு

போதைப்பொருட்கள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்தல்

  • இலங்கைக்குள் போதைப்பொருள் இறக்குமதியைத் தடுக்கவும், இலங்கை வழியாக செல்லும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் பாதைகளைச் சீர்குலைக்கவும் இன்டர்போல் மற்றும் பிற வெளிநாட்டு புலனாய்வு சேவைகளுடன் நெருக்கமாக செயல்படுவோம்.
  • பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரித்து 6 மாதங்களுக்குள் தண்டனை வழங்க போதைப்பொருள் எதிர்ப்பு  விசேட மேல்நீதிமன்றம் (Anti-narcotic special high court)  நிறுவப்படும்.
  • போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை விரைவாக புனர்வாழ்வளித்து சமூகத்தில் மீண்டும் இணைக்க நாடு முழுவதும் நவீன வசதிகளுடன் 25 புனர்வாழ்வு நிலையங்கள் நிறுவப்படும்.
  • 2 ஆண்டுகளுக்குள் நச்சு போதைப்பொருள் கடத்தலை முற்றிலுமாக ஒழிக்க பாடுபடுவோம்.
  • மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தலை ஊக்கமிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் அண்மையில் ஊழல் முறையில் வழங்கப்பட்ட "மதுபான உரிமங்களை" இரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம்.

அனைவருக்குமான இலங்கையை கட்டியெழுப்புவோம்

எம்முடன்இணைந்து மாற்றத்தை ஏற்படுத்துங்கள்